2018ல் காணாமல் போன ரியல் எஸ்டேட் அதிபர் : கடத்தி கொலை செய்து வீசிய கொடூரம் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் கைது

சேலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி சென்று கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2018ல் காணாமல் போன ரியல் எஸ்டேட் அதிபர் : கடத்தி கொலை செய்து வீசிய கொடூரம் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் கைது
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நாச்சம்பட்டி செலவடை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மாயமானார். தனது கணவரை காணவில்லை என சக்திவேலின் மனைவி புகார் அளித்த நிலையில் அவரது உடல் ஒரு வாரத்திற்கு பின் மீட்கப்பட்டது. விசாரணையில் சக்திவேலை, ஈரோட்டை சேர்ந்த அவரது தொழில்முறை நண்பரான சீனி என்கிற சீனிவாசன் அழைத்து சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை பிடித்து விசாரித்த போது பணம் பறிக்கும் நோக்கத்தில் சக்திவேலை கடத்திச் சென்று கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கொலையாளிகளான சீனிவாசன், புஷ்பராஜ், திருப்பூர் வெங்கடேசன், முருகபாண்டி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 2 வருடங்களுக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்