"பல அவமானங்களை சந்தித்தே முதன்மை செயலாளர் பதவிக்கு உயர்ந்துள்ளேன்" - கே.என்.நேரு

பல அவமானங்களை சந்தித்து தான், முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
x
பல அவமானங்களை சந்தித்து தான், முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், தெற்கு மாவட்டசெயலாளர் மகேஷ் பொய்யா மொழி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, பல அவமானங்களை சந்தித்து தான்,  முதன்மை செயலாளர் நிலைக்கு வந்துள்ளதாக, தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்