12 வயது சிறுமிக்கு 35 வயது நபருடன் திருமணம் - மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த தாய் கைது

சேலம் அருகே 12 வயது மகளை 35 வயது நபருக்கு கட்டாய திருமணம் செய்து கொடுத்த தாய் மற்றும் மணமகனையும் ஏழு மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
12 வயது சிறுமிக்கு 35 வயது நபருடன் திருமணம் - மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த தாய் கைது
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரத்தினம். கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ள நிலையில் தன் உறவினரான செந்தில்குமார் என்ற 35 வயது நபருக்கு மகளை மணமுடிக்க திட்டமிட்டார் தாய் ரத்தினம். மகளுக்கு விருப்பமில்லாத போதும் வலுக்கட்டாயமாக அவரை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 7 மாதங்களாக செந்தில்குமாரும் சிறுமியின் தாய் ரத்தினமும் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்