பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் அளித்து உத்தரவு

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியது.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் அளித்து உத்தரவு
x
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் ஜாமீன் வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டை சேர்ந்த அன்வர் ஹுசைன், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட போது, பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன்ஜாமீன் கோரிய, அவரது மனுவை நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், நிபந்தனை அடிப்படையில் அன்வர் ஹூசைனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்