சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா : சாதனை படைத்த மாணவிக்கு விருது வழங்கி கௌரவிப்பு

உழைப்பால் உயர்ந்து சாதனை படைத்த பெண்ணுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயரிலான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா : சாதனை படைத்த மாணவிக்கு விருது வழங்கி கௌரவிப்பு
x
சென்னை மணலியில் உள்ள  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 21 - வது ஆண்டு விழா  கொண்டாடப்பட்டது.  அப்போது கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோசிகாவிற்கு கல்வி  செம்மல் காமாட்சி பாண்டியனார் விருது என்ற வழங்கப்பட்டது. உழைப்பால் உயர்ந்து  சாதனை படைத்த  ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் இளவரசிக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனர் செல்வ கணேஷ், நாடார் மகாஜன சங்க  இணை செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாணவிகளின் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

Next Story

மேலும் செய்திகள்