"தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்"

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 335 இடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்
x
கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இருகட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

* இதைத் தொடர்ந்து, ஜனவரி 11ஆம் தேதி நடத்தப்பட்ட ஊராட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல், சிவகங்கை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டது. 

* 335 பதவிகளுக்கு நிறுத்தப்பட்ட இந்தத் தேர்தல்,  இன்று நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

* இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கும்,

* பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்குமான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. 

* மறைமுக தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்தல், பாதுகாப்பு வசதிகளுடன் தயாராக இருக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்