எஸ்.ஐ. வில்சன் கொலை - அதிர்ச்சி தகவல்

குமரி மாவட்டம், களியக்காவிளையில், காவல் உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் ஆயுதங்களை கடத்த முயற்சித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
x
குமரி மாவட்டம், களியக்காவிளையில், காவல் உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தபோது தீவிரவாதிகள் ஆயுதங்களை கடத்த முயற்சித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சோதனை சாவடியில் அவர்களை தடுத்ததால், வில்சன் மீது  தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக, பெங்களூருவில் பிடிபட்ட தெளபிக், அப்துல் சமீம் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத்தில் 17 பேர் கொண்ட குழுவுடன் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும், அந்த 17 பேரில் 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்