பச்சிளம் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் : பெற்ற தாயே குழந்தையை கொன்றது விசாரணையில் அம்பலம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெற்ற குழந்தையை தாயே அடித்துக்கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பச்சிளம் குழந்தை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் : பெற்ற தாயே குழந்தையை கொன்றது விசாரணையில் அம்பலம்
x
குண்டுபெட்டு காலனியில் உள்ள தேயிலை தோட்டத்தில்,  மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குண்டுப்பெட்டு காலனியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. கணவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புஇறந்து விட, முத்துலட்சுமிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அந்த குழந்தை பிறந்ததும் விசாரணையில் தெரியவந்தது. குழந்தையை கொன்ற முத்துலட்சுமியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்