குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி... தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி... தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட இஸ்லாமியர்கள்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி,  திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நடந்த  இந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகளை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்த கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தை ஒட்டி அங்கு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டதுடன், 200- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்