நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு
நாமக்கலில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் பெரியசாமி, தனது நண்பர்களுடன் புதுப்பட்டி பகுதியிலுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி சேற்றில் சிக்கி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புதுறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். அது மலைப்பகுதி என்பதால் வாகனம் செல்ல பாதை இன்றி, சிறுவனின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கரடு முரடான பாதையில் தோளில் சுமந்து கொண்டு சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்