முகாமில் நீண்ட நேரம் ஷவர் குளியல் போடும் யானைகள் - செல்பி எடுத்து மகிழும் பார்வையாளர்கள்
மேட்டுப்பாளையம் அருகே தொடங்கியுள்ள சிறப்பு நலவாழ்வு முகாமில் யானைகள் போடும் ஷவர் பாத் குளியல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மணிக்கணக்கில் ஷவரில் ஆனந்த குளியல் போடும் யானைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி நடைபயிற்சியும் வழங்கப்பட்டது.
26 யானைகளும் பாகன்களின் உத்திரவுக்கு கட்டுப்பட்டு வரிசையாக நடைபயிற்சி செல்வதும், அடுத்தடுத்து குளிப்பதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனை பலரும் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
Next Story