ஜனவரி 6-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 ஆம் தேதி, ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 6-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்குகிறது
x
ஆறு மாத இடைவெளியில் சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பதால், அடுத்த மாதம் 6 ஆம் தேதி கூட்டத்தொடர் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கு முன்னர் ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற்றது. இதையடுத்து அடுத்த
கூட்டத்தொடரை ஜனவரி 19 ஆம் தேதிக்குள் கூட்டப்பட வேண்டும். ஆனால், ஜனவரி 13 ஆம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகை  வருவதால், கூட்டத் தொடர் முன்கூட்டியே நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகளுக்கு பின்னர் சட்டப்பேரவை கூடுவதால் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்