மாமியாரை கடித்து குதறிய மருமகள் - குடும்ப சண்டையால் நேர்ந்த விபரீதம்

பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் மாமியாரை கடித்த மருமகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாமியாரை கடித்து குதறிய மருமகள் - குடும்ப சண்டையால் நேர்ந்த விபரீதம்
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள மின்நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி. இவரது மகன் சரவணகுமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சரவணகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த கல்பனா, தனது மாமியார் நாகேஸ்வரியுடனும் அடிக்கடை சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஆண்டு மாமியாரை அடித்ததாக மருமகள் கல்பனா மீது காவல் நிலையத்தில் புகார் உள்ள நிலையில் அதை வாபஸ் பெறுமாறு மாமியாரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த கல்பனா, தனது மாமியார் நாகேஸ்வரியின் தலையில் கடித்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு ஆறு தையல் போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்