சிலை கடத்தல் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன் மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன் மாணிக்கவேல்
x
சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக,  பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.  

* பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,  உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

* இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்புடைய  17 ஆயிரத்து 790 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் அனைத்தையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

* ஆனாலும் தமக்கு எதிராக தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

* சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஆவணங்களை ஒப்படைப்பதற்கு உரிய கால அவகாசத்தை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

* தீய நோக்கத்துடனும் நியாயமற்ற முறையிலும், அலைக்கழிக்கும் நோக்கத்தில் அவசரஅவசரமாக  உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். 

* பொன் மாணிக்கவேல் சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர்களிடம் அளிக்கப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்