ரூ.2000 கோடி பிட் காயின் வழக்கில் புதிய திருப்பம் : மோசடியில் ஈடுபட்டவர்கள் காணவில்லை என புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பிட் காயின் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும், ராஜதுரை - ஸ்வேதா தம்பதியரை காணவில்லை என, ஸ்வேதாவின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ரூ.2000 கோடி பிட் காயின் வழக்கில் புதிய திருப்பம் : மோசடியில் ஈடுபட்டவர்கள் காணவில்லை என புகார்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தம்பதி ராஜதுரை - ஸ்வேதா. இவர்கள் இருவரும் பிட் காயின் மூலம், இரண்டாயிரம் கோடி ரூபாய், மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, ஸ்வேதாவின் தாயார், மல்லிகா, உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், தமது மகள் மற்றும் மருமகனை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். காணாமல் போன இருவரையும், கண்டுபிடித்தால் மட்டுமே  உண்மை நிலவரம் தெரிய வரும் என ஸ்வேதாவின் தாயார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்