"அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்"

அரசு நிலைப்பாடு - அமைச்சரிடம் விசாரித்த ஆளுநர்
அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்
x
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்வி நிறுவன அந்தஸ்து கிடைப்பதற்கு காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என துணைவேந்தர் சூரப்பா பேசியதும், உடனடியாக ஆளுநர்,  உயர் கல்வி அமைச்சர் அன்பழகனிடம், இதுபற்றி விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழாவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பாடப்பிரிவுகளில் சிறப்பாக படித்து முதல் இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினார்.தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்குப் பின்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து மத்திய அரசு தெளிவான பதிலைத் தராதவரை தமிழக அரசு ஒப்புதல் கடிதத்தை வழங்காது  என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்