"நடூரில் 17 பட்டியலினத்தவர் உயிரிழந்த விவகாரம் - போலீஸ் அத்துமீறல் குறித்து விசாரிக்கவும் வலியுறுத்தல்"
"தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையர் விசாரணை நடத்த வேண்டும்"
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூரில் தீண்டாமைச் சுவர் இடிந்து 17 பட்டியலினத்தவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய தலைவரை நேரில் அனுப்பி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட்டிடம், விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார் மனு அளித்துள்ளார். தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டது தொடர்பாக நடூருக்கு, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் அவர் கோரியுள்ளார். போலீஸ் அத்துமீறல் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் கோரியுள்ளார்.
Next Story