யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்ற மூதாட்டி : மூதாட்டியை மீட்டு மீண்டும் சிகிச்சை அளித்த ஊழியர்கள்

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்ற நிலையில், அவரை மீண்டும் அழைத்து வந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு, பாராட்டுகள் குவிந்து வருகின்றன
யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சென்ற மூதாட்டி : மூதாட்டியை மீட்டு மீண்டும் சிகிச்சை அளித்த ஊழியர்கள்
x
திருப்பூர் மாவட்டம் கரடிவாவியைச் சேர்ந்த முத்தம்மாள் என்ற 85 வயது மூதாட்டி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல், அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர், ரயில் தண்டவாளம் அருகே ஆபத்தான நிலையில் தள்ளாடியபடி சென்று கொண்டிருந்ததை பார்த்த சிலர், கோவை அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற  
மருத்துவமனை ஊழியர்கள், மூதாட்டியைப் பத்திரமாக மீட்டுவந்து, மீண்டும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களின் இந்த சேவைக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. 


Next Story

மேலும் செய்திகள்