நிரம்பி வழியும் பவானி சாகர் அணை

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது.
நிரம்பி வழியும் பவானி சாகர் அணை
x
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. இந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணைக்கு வரும் 10 ஆயிரத்து 200 கனஅடி உபரிநீர் அணையின் மேல்மதகுகள் வழியாக பவானி ஆற்றில் திறந்துவிட்டப்பட்டுள்ளது. இதையடுத்து  சத்தியமங்கலம் நகராட்சியில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர்  பாதுகாப்பான இடத்திற்குசெல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.  மேலும், ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம்  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அழகை சுற்றுவட்டார பகுதிமக்கள்
வந்து பார்த்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்