போராட்டத்தை தள்ளிவைக்கிறோம் - தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 6 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
x
தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட 4 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 6 வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை அழைத்து நேற்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நள்ளிரவு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு  அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்