சென்னை தீவுத்திடலில் மந்தமான பட்டாசு விற்பனை

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
x
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசுகள் தான்... வயது வித்தியாசமின்றி அனைவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற பட்டாசுகளை வாங்கி வெடித்து மகிழ்வார்கள். சென்னைவாசிகள் பட்டாசுகளை வாங்குவதற்கு ஏற்றார்போல தீவுத்திடலில் கடைகள் அமைக்கப்படும். இங்கு வந்து பட்டாசுகளை மொத்தமாக வாங்கி செல்வோரும் உண்டு. இந்த ஆண்டு பட்டாசு விற்பனை செய்வதற்காக 65 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகள் ஒரு பக்கம் வந்தாலும் சிறுவர்களின் விருப்பமாக பட்டாசுகள் இருப்பதால் அதனை வாங்க கடைகளுக்கு வரும் மக்களும் உண்டு. கடைகளுக்கு வருவோர் விலை அதிகமாக இருப்பதாக கூறினாலும், தங்கள் தேவைக்காக குறைந்த அளவேனும் பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்