முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம்  உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளாங்கோம்பை, கம்மனூர், மல்லியம்மன்துர்க்கம், உள்ளிட்ட வனப்பகுதியில் இரவு பெய்த கன மழையால், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது.  அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளவான 42 அடியை எட்டியதால், 6 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்