நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் ஒரு மாணவி கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் ஒரு மாணவி கைது
x
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் , கைது செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, அவரது தாயாரையும் சென்னைக்கு வந்து கைது செய்த சிபிசிஐடி போலீசார், இருவரையும் தேனிக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவ பரிசோதனை நடத்தினர். மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்படுவார் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்