போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
x
அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபரின் கையில் ஊசி போடும் தழும்பு இருந்ததையடுத்து அந்த நபர் போதை ஊசி பயன்படுத்துவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் இடத்தை அறிந்து கொண்ட போலீசார், அங்கு மாறு வேடத்தில் சென்று போதை மருந்தை வாங்கியுள்ளனர். போதை மருந்தை விற்பனை செய்த போது ஜெகன், ரியாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் சேர்ந்து கும்பல் ஒன்று போதை பொருட்களை விற்பது தெரியவந்தது. இதனையடுத்து டிஎஸ்பி கோகிலா தலைமையிலான போலீசார் பெண் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்