காந்தி நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, புதுடெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, புதுடெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் மலர் தூவி, மரியாதை செலுத்தினர். சோனியாகாந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் - முக்கிய பிரமுகர்களும் கலந்து
கொண்டனர். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 - வது பிறந்த நாள் விழா, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. தலைநகர் டெல்லி - ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மனைவியுடன் வந்து, காந்தி நினைவிடத்தில் மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.
காந்தி நினைவிடத்தில், பிரதமர் நரேந்திரமோடி, மலர் தூவினார்.
Next Story