சென்னையில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் கொள்ளை முயற்சி - துப்பாக்கியை காட்டி துணிச்சலுடன் விரட்டிய பாதுகாவலர்

சென்னையில் தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் 20 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி துணிச்சலுடன் காவலாளி விரட்டியடித்துள்ளார்.
சென்னையில் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் கொள்ளை முயற்சி - துப்பாக்கியை காட்டி துணிச்சலுடன் விரட்டிய பாதுகாவலர்
x
சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் அடகு நகை மீட்பு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர், பெங்களூரிவிலிருந்து பேருந்து மூலம்  20 லட்சம் ரூபாயை கொண்டு வந்துள்ளார்.

கோயம்பேட்டிலிருந்து  தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நிறுவனத்திற்கு  இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது 3 முகமூடி கொள்ளையர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். 

நிறுவன அலுவலகம் அருகே கிரீஷ் சென்ற போது அவர் கொண்டு சென்ற பணப்பையை முகமூடி கொள்ளையர்கள் பறிக்க முயன்றுள்ளனர்.

ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு, பாதுகாவலர் சையத் சுல்தான் என்பவர் துப்பாக்கியுடன் துணிச்சலாக சென்று கொள்ளையர்களை விரட்ட முயன்றார்.
இதனால் அச்சமடைந்த  கொள்ளையர்கள் தப்பி  ஓடி விட்டனர்.

கைத்துப்பாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையர்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த  சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், முகமூடி கொள்ளையர்களை தீவிமாக தேடி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்