சென்னை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 16 வயது சிறுவன் மீது சிறுமியின் தாய் புகார்

சென்னை அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் மீது புகார் கொடுக்க உதவியவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 16 வயது சிறுவன் மீது சிறுமியின் தாய் புகார்
x
சென்னை  தாம்பரம்  புதுநல்லூர் பகுதியில்  4 வயது சிறுமியை  16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்  காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். அதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பாபு என்பவர் உதவியுள்ளார். தகவலறிந்த சிறுவனின்  உறவினர்  பழனி உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் பாபுவை 
சரமாரியாக தாக்கியது. பாபுவை பழனி உள்ளிட்டோர் தாக்கும் அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்