"சந்திரயான் 2 - உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது" - மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
x
சந்திரயான்-2 ஏவப்பட்ட பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளதாக இஸ்ரோ  முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் 78- வது ஆண்டு தின விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் முடிவடைந்ததாகவும்,  இனி அதை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். 
விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் மயில்சாமி அண்ணா துரை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்