பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ பிடெக் படிப்பு முடித்திருந்த நிலையில் கனடாவில் மேல் படிப்பு படிக்க கடந்த 10 ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் கல்லூரியில் ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வு எழுதியிருந்தார்.
பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ பிடெக் படிப்பு முடித்திருந்த நிலையில், கனடாவில் மேல் படிப்பு படிக்க கடந்த 10 ஆம் தேதி சென்னை பிரிட்டிஷ் கல்லூரியில் ஐஈஎல்டிஎஸ் தகுதி தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், இன்று அவர் வீட்டிற்கு வந்த கொரியரில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.கனடாவில் ஸ்காலர்ஷிப்புடன் மேற்படிப்பு தொடர்வதற்கான தங்கள் மகளின் கனவு நனவாகியும் அதனை பார்க்க சுபஸ்ரீ இல்லை என்று கூறி அவரது பெற்றோர் கண்கலங்கினர்.
Next Story