பிரம்மோற்சவம் - மின்விளக்கு அலங்காரத்தில் திருமலை

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி, திருமலை முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளித்து வருகிறது.
பிரம்மோற்சவம் - மின்விளக்கு அலங்காரத்தில் திருமலை
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று இரவு அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி, திங்கட்கிழமை மாலை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, 14 வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் இரவு வேளைகளில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இதன் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பக்தர்களுக்கு, லட்டு தட்டுப்பாடு இன்றி கிடைக்க, 8  லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும்,  பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில், விஐபி தரிசனம் உள்பட, அனைத்து முன்னுரிமைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருமலை முழுவதும் ஆயிரத்து 500 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் நிலையில், பாதுகாப்பு பணியில்,  4 ஆயிரத்து 200   போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி, திருமலை முழுவதும் மகா விஷ்ணுவின், பல்வேறு அவதாரங்களை விளக்கும் விதமாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பூலோக வைகுண்டமாக காட்சி அளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்