மதுரை விமான நிலையத்தில் 23 துப்பாக்கிகள் பறிமுதல்

மதுரை விமானத்தில் 23 துப்பாக்கிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
x
கடந்த 22 ஆம் தேதி துபாயில் இருந்து மதுரைக்கு தனியார் விமானத்தில் வந்த அஜ்மல் கான், காலிக் முகமது, முனீஸ்ப்பு ஆகியோர், பாதுகாப்பு கருவியை தாண்டும் போது அதிலிருந்து சப்தம் வந்துள்ளது. அவர்கள் மூவரையும்  பாதுகாப்பு அதிகாரிகள்  சோதனை செய்தனர். விளையாட்டிற்காக பயன்படுத்தப்படும் 23 துப்பாக்கிகள் அவர்களிடம் இருந்தது சோதனையில் தெரியவந்தது.  உரிய ஆவணங்கள்  இல்லாமல் 23 துப்பாக்கிகள் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில்,  இந்திய துப்பாக்கி சுடும் விளையாட்டு கழகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த தகவல் தவறு என தெரிய வந்த நிலையில்,  23 விளையாட்டு துப்பாக்கிகளையும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியின் மதிப்பு 17 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்