போதையில் சாலையில் அமர்ந்து சாப்பிட்ட நண்பர்கள்

பெரியகுளம் அருகே குடிபோதையில், சாலையில் அமர்ந்து சாப்பிட்ட நண்பர்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
x
தேவதானப்பட்டித்தை சேர்ந்த நண்பர்கள் 2 பேர், இணைந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் தேனி-திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து, இருவரும் உணவு  சாப்பிட்டனர். போதை நண்பர்களின் அலப்பறையை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர். இதனால் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. போதை நண்பர்கள் செய்த ரகளைகளை அங்கிருந்த ஒருவர், தனது செல்போனில் படம் எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது, அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த நண்பர்கள் மீது, தேவதானப்பட்டி காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்