"டியூசன் ஆசிரியை தாக்கியதில் சிறுவன் படுகாயம்"

நாகர்கோவில் அருகே மாணவரை தலையில் ரத்தக்காயம் ஏற்படும் அளவிற்கு தாக்கிய டியூசன் ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டியூசன் ஆசிரியை தாக்கியதில் சிறுவன் படுகாயம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பள்ளிவிளையை சேர்ந்தவர் அபுபக்கர். ஆறாம் வகுப்பு படிக்கும் இவரது மகன் பாரிஸ் டியூசன் ஆசிரியையால் தாக்கப்பட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில்,  வீட்டிற்கு வந்துள்ளார் பாரிஸ்... இதை கண்டு அதிர்ச்சியடைந்த அபுபக்கர்,  டியூசன் ஆசிரியை சரண்யா மீது வடசேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பெற்றோருடன் தலைமறைவாக உள்ள சரண்யாவை தேடி வருகின்றனர். காயமடைந்த மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்