"கொலை வழக்கு - கே.பி.பி.சாமி விடுதலை" - பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு

சென்னை திருவொற்றியூர் மீனவர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உட்பட 7 பேரை விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கு - கே.பி.பி.சாமி விடுதலை - பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை திருவொற்றியூர் மீனவர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உட்பட 7 பேரை  விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு  கே.வி.குப்பத்தை சேர்ந்த மீனவர் செல்லதுரை என்பவரை கடத்தி கொலை செய்ததாக கே.பி.பி சாமி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. பொன்னேரி நான்காவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கே.பி.பி.சாமி உள்ளிட்ட  7 பேரையும்  விடுதலை செய்து நீதிபதி இருசன் பூங்குழலி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்