"தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்"

தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்
x
திருப்பூர் ஆட்சியர் பழனிசாமி மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக விஜய கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் ஆட்சியராக இருந்த ஆசியா மரியம் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக மேகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகை ஆட்சியராக பிரவீன் பி.நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

வேலைவாய்ப்புத்துறை ஆணையராக பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனிம வளத்துறை பொது மேலாளராக இருந்த மகேசன் காசிராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்புத்துறை ஆணையராக இருந்த ஜோதி நிர்மலா பத்திரப்பதிவு ஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைவினைப்பொருட்கள் வாரியத்தின் பொது மேலாளராக இருந்த சந்திர மோகன் எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக இருந்த நசிமுதின், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை துணை செயலாளராக இருந்த ஆனி மேரி சொர்ணா மாற்றப்பட்டு புதிய துணை செயலாளராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார் 

தர்மபுரி துணை ஆட்சியராக இருந்த சிவ அருள் திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்