திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது

ஊர்மக்களை அச்சுறுத்தி வந்த கும்பல் சிக்கியது
திமுக பிரமுகரிடம் கத்தியை காட்டி வழிப்பறி : 4 இளைஞர்கள் கைது
x
கடந்த 15 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரிடம் 6 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 6 ஆயிரம் ரூபாய் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதேபோல கடந்த சில தினங்களாக தீவனூர், ஆசூர் ஆகிய கிராமங்களில் வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளன. இதனால், எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்த‌தில், தீவனூரை சேர்ந்த ராஜ்குமார், பிரவீன், சுமன், அருள் முருகன் ஆகிய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்