விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக அருள்வாக்கு : பொக்லைன் இயந்திரம் மூலம் தேடுதல் வேட்டை
திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக கூறி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே விவசாய நிலத்தில் புதையல் இருப்பதாக கூறி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது. அழகாபட்டி என்ற கிராமத்தில், பொன்னம்பலம் என்பவரது விவசாய நிலத்தில் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த தனபால் அருள் வாக்கு கூறியிருந்தார். தகவலறிந்து விரைந்து வந்த வருவாய் துறையினர் உரிய அனுமதியின்றி புதையல் தேடும் பணியில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி, புதையல் தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
Next Story