சொந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து 146 இலங்கை தமிழர்கள் ஐ.நா அதிகாரிகளிடம் மனு

சொந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து 146 இலங்கை தமிழர்கள் ஐ.நா. அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
சொந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து 146 இலங்கை தமிழர்கள் ஐ.நா அதிகாரிகளிடம் மனு
x
இலங்கை உள்நாட்டுப் போரின் போது லட்சக்கணக்கானோர், இடம் பெயர்ந்து தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.  இந்நிலையில், இலங்கை போர் முடிந்து பத்து ஆண்டுகளை கடந்த நிலையில்,  சொந்த நாட்டுக்கு செல்ல இலங்கை தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் முறையான அனுமதி பெறாமல் கடல் வழியாக செல்லும் நிலையில், ஐ.நா. அதிகாரிகள் மூலம் முறையான அனுமதியுடன் விமானம் மூலமாகவும் பலர் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  இந்த நிலையில், 45 குடும்பங்களைச் சேர்ந்த 146 பேர், தங்களின் தாய் நாட்டிற்கு செல்வதற்காக  ஐ.நா அதிகாரிகளிடம் விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்