சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் 5 கி.மீ சுற்றி செல்லும் கிராம மக்கள்
ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஆரணி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வெள்ள நீர் புகுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கண்ணமங்கலம் பேரூராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்க பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக ரயில்வே சுரங்கபாதையில் வெள்ள நீர் தேங்கியது. இதனால் மாணவ மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுரங்க பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story