குடியிருப்பு பகுதியில் ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தை

இரவில் வெளியே வர மக்களுக்கு வனத்துறையினர் தடை
குடியிருப்பு பகுதியில் ஆட்டை தாக்கி கொன்ற சிறுத்தை
x
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அட்டடி கிராமத்தில் சமீப காலமாக, சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றை, குடியிருப்பு பகுதியிலேயே வைத்து தாக்கி கொன்றது. இதைக் கண்ட அப்பகுதியினர் சத்தம் போட்டதை அடுத்து, சிறுத்தை வனப்பகுதிக்குள் ஒடிவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்