தனியார் வங்கி பெண் மேலாளர் கடத்தல் : போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மயிலாடுதுறை அருகே தனியார் வங்கி பெண் மேலாளரை காரில் கடத்திய, வடமாநில கொள்ளையர்கள் அவரிடம் இருந்த நகைகளை பறித்துக்கொண்டு, கீழே இறக்கிவிட்டு சென்றனர்.
கிளியனூரை சேர்ந்த காயத்ரி, மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் திரும்பியபோது, காயத்ரியை வடமாநில கொள்ளை கும்பல், காரில் கடத்திச்சென்றுள்ளது.
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், பெரம்பூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காயத்ரியை கடத்திச்சென்ற கொள்ளையர்கள், அவரிடமிருந்த நகைகளை பறித்துக்கொண்டு நள்ளிரவில் திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் இறக்கிவிட்டு சென்றனர்.
இதுகுறித்து பெற்றோருக்கு தொலைபேசி மூலம் காயத்ரி அளித்த தகவலின் பேரில், அவரை மீட்ட போலீசார், கடத்தல் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story