சுபஸ்ரீ பெற்றோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்

"பேனர் கலாசாரத்தை மக்கள் ஒழிப்பார்கள்"
சுபஸ்ரீ பெற்றோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்
x
சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோருக்கு, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் அகற்றுவது போல ஒரு நாடகமாடுவது இனி எடுபடாது என்றும், பேனர் கலாச்சாரத்தை மக்கள் ஒழிப்பார்கள் என்றும்,  தெரிவித்துள்ளார். எல்லா குற்றங்களில் இருந்தும் தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கை இரு கட்சிக்காரர்களுக்கு இருக்கிறது என்றும்,  அது தகர்க்க பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை, உயிரிழந்த சுபஸ்ரீ மீது குற்றம்  சொல்லியிருக்க கூடாது என்றும், இனியாவது சம்மந்தப்பட்டவர்கள் தங்களை திருத்திக் கொள்ள ​வேண்டும் என்றும் கம​ல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்