குடிபோதையில் கார் ரேஸில் ஈடுபட்ட குடிமகன்கள் - அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடிபோதையில் குடிமகன்கள் கார்ரேஸில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் கார் ரேஸில் ஈடுபட்ட குடிமகன்கள் - அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு
x
காந்தி நகர் பகுதியில் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார்களை போலீசார் பின் தொடர்ந்தனர். அப்போது ஒரு கார் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தின் தூணிலும் மற்றொரு கார் அருகே உள்ள கால்வாயிலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. காரில் ஏர்பேக் இருந்ததால் காரை ஓட்டி வந்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். விசாரணையில், காரை ஓட்டி வந்தவர்கள்  நகைப் பட்டறை அதிபர்களான கோவை சேர்ந்த கார்த்திக் மற்றும் மதுரை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பதும் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த இருவரும் மதுபோதையில் கார் ரேஸில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்