அண்ணா பிறந்தநாளையொட்டி 130 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள் பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பிறந்தநாளையொட்டி 130 பேருக்கு அண்ணா பதக்கம்  அறிவிப்பு
x
அண்ணா பிறந்தநாளையொட்டி,  தமிழக காவல்துறை மற்றும் சீருடை அதிகாரிகள், பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் 100, தீயணைப்பு துறையில் 10, சிறைத்துறையில் 10, ஊர்க்காவல்படையில் 5, விரல்ரேகை மற்றும் தடயஅறிவியல் துறையில் 5 என மொத்தம் 130 பதக்கங்கள் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். மேலும் மணல் திருட்டை தடுக்கும் போது உயிர்நீத்த காவலர் ஜெகதீஷ் துரைக்கு, முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கமும், அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வெகுமதியும் வழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்