சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற இன்று முதல் ரோந்து வாகனம் செயல்படும் - சென்னை மாநகராட்சி

சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற இன்று முதல் ரோந்து வாகனம் செயல்படும் - சென்னை மாநகராட்சி
x
இதன்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்ட விரோதமாக வைக்கப்படும்  பேனர்களை அகற்ற இன்று முதல் ரோந்து வாகனம் செயல்படும் என மாநராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியும், சென்னை காவல் துறையும் இணைந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சட்ட விரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட உள்ளது.

பிரத்யேக தொலைபேசி எண்ணுடன் கூடிய 3 ரோந்து வாகனங்கள், இந்த பணியில் ஈடுபடும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதன்படி, மண்டலம் 1 முதல் 5 வரையிலான புகார்களுக்கு 94451- 90205 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்... மண்டலம் 6 முதல் 10 வரை 94451 90698 மற்றும் மண்டலம் 11 முதல் 15 வரை 94451 94802 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். 

Next Story

மேலும் செய்திகள்