பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பீடி பண்டல்கள் விற்பனை - மதுரையில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
மதுரை புறநகர் பகுதிகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பீடி பண்டல்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
மதுரை புறநகர் பகுதிகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி பீடி பண்டல்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. மண்டேலா நகர் பகுதியில் சரக்கு வாகனத்தில் வந்த 3 பேர் அப்பகுதியில் உள்ள கடை களுக்கு போலீ பீடி பண்டல்களை விற்பனை செய்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த, தனியார் பீடி நிறுவன ஊழியர்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நரிமேடு பகுதியை சேர்ந்த சங்கர், ரமேஷ், ராஜசேகர் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், விற்பனைக்கு கொண்டு வந்த 72 போலி பீடி பண்டல்கள் மற்றும் வேனையும் பறிமுதல் செய்தனர்.
Next Story