கொடைக்கானல் ஏரியை தூர்வாரி அழகுப்படுத்த திட்டம் - விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சுற்றுலா செயலாளர் ஆணை
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை செயலாளருமான அபூர்வ வர்மா கொடைக்கானலில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகதிற்கு சொந்தமான படகு குழாமை ஆய்வு செய்தார்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை செயலாளருமான அபூர்வ வர்மா கொடைக்கானலில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகதிற்கு சொந்தமான படகு குழாமை ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், 28 லட்ச ரூபாய் செலவில் படகு குழாம் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், 40 புதிய படகுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்துவது மற்றும் தூர்வாருவது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நகராட்சி ஆணையரை அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story