"வீடு கட்டும் நிதியுதவி திட்டத்தின் கீழ் மோசடி" : ஊராட்சி மன்ற செயலாளர் பணியிடை நீக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த திம்மநாய்க்கன்பட்டி ஊராட்சியில் பிரதமர் வீடுகட்டும் நிதியுதவி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு, கழிவறை கட்ட தலா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த திம்மநாய்க்கன்பட்டி
ஊராட்சியில் பிரதமர் வீடுகட்டும் நிதியுதவி திட்டத்தின் கீழ்  பொதுமக்களுக்கு வீடு, கழிவறை கட்ட தலா 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற செயலாளர் கருணாகரன் என்பவர்  இறந்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முருகேசன் என்பவர் விவரங்களை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு கருணாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்