பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா : சென்னையில் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு சுமார் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்துகள் கொடியேற்றம் நடக்கும் நாளான இன்று 29ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story