கோயிலின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்

ஈரோடு அருகே கோயிலின் உண்டியலை உடைத்து எடுத்து சென்ற கொள்ளையர்கள் அதில் இருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கோயிலின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள்
x
ஈரோடு மாவட்டம் கோவிந்த நாயக்கன்பாளையத்தில் உள்ள எல்லை மாகாளியம்மன் கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த உண்டியலை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைத்து உடைத்து அதில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் மொடக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் இதுவரை ஐந்து முறை கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்